உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற தடகள வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

 
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற தடகள வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

நைரோபியில் நடைபெறும் 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2021-இல் பதக்கங்களை வென்ற தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

“வெற்றிகளும் வேகமும் வசமாகின்றன. 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2021-இல், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ள நமது தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள். தடகளம், நாடு முழுவதும் பிரபலமடைகிறது, இது எதிர்காலத்திற்கான சிறந்த அடையாளம். கடுமையாக உழைக்கும் நமது தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.

From around the web