சேலம் கேஸ் சிலிண்டர் விபத்தில் தொடரும் சோகம்..!

 
சேலம் கேஸ் சிலிண்டர் விபத்தில் தொடரும் சோகம்..!

சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை.

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய வீட்டில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் கணேசனுடைய வீடு உள்ளிட்ட அருகிலிருந்த 4 வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.

சேலம் கேஸ் சிலிண்டர் விபத்தில் தொடரும் சோகம்..!

கணேஷ் வீட்டில் இருந்து மூதாட்டி ராஜலட்சுமி காலையில் டீ போடுவதற்கு அடுப்பை பற்றவைத்த போது சிலிண்டர் வெடித்துள்ளதாக சேலம் போலீஸ் தகவல் வெளியிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜலட்சுமி (70) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும் இந்த கோர விபத்தில் தீயணைப்பு சிறப்பு அலுவலர் பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, எல்லாம்மாள் மற்றும் கார்த்திக் ராம் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சேலம் எரிவாயு சிலிண்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

சேலம் கேஸ் சிலிண்டர் விபத்தில் தொடரும் சோகம்..!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

From around the web