சென்னையில் மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்!

 
சென்னையில் மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்!

சென்னையில் காரை வேகமாக ஓட்டியதால் கார் தலை குப்புற கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போகலூரை சேர்ந்தவர் அப்ரின்கான்.இவருக்கு வயது 26. இவர், துபாயில் இருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்ல மற்றொரு உறவினர் சையத்துடன் இணைந்து இ-பதிவு செய்த காரில் சென்னை வந்திருந்தார்.

விமானம் மதியம்தான் வரும் என்பதால் இருவரும் காரில் மண்ணடி சென்று கொண்டிருந்தனர். கிண்டி மேம்பாலத்தில் சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் அப்ரின்கானின் கட்டுப்பாட்டை இழந்தது. கார் மேம்பால தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்ததுகாரில் இருந்த 2 பேரும் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பெரும் அதிசயமாக பார்க்கப்பட்டது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற கிண்டி போக்குவரத்து காவல்துறை சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை உடனடியாக அப்புறப்படுத்தினர். உறவினரை அழைத்துச்செல்ல இரவு நேரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து காரில் வந்ததனால் தூக்க கலக்கத்தில் காரை கவனக்குறைவாக ஓட்டி அரசு சொத்துகளை சேதப்படுத்தியதற்காக அப்ரின்கானை போக்குவரத்து துறை கைது செய்துள்ளது . அவரது காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

From around the web