இன்று முதல் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்!

 
இன்று முதல் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்!


தமிழகத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், இதனை ஜூலை 19ம் தேதி வரை நீட்டித்து மாநில முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச்சடங்குகளில் 20 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரிக்கான பேருந்து போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்!

உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள் , நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளிலும் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் இதனை அலுவலகங்கள் மற்றும் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இன்று முதல் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்!

குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டும். கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

இன்று முதல் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்!


வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web