இன்று பிளஸ் 1 மாணவர் சேர்க்கை

 
இன்று பிளஸ் 1 மாணவர் சேர்க்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.

மேலும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடந்தது. சென்னையில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள்.

From around the web