சென்னை மசாஜ் செண்டரில் பாலியல் தொழில்..? அதிரடி சோதனை..!

 
சென்னை மசாஜ் செண்டரில் பாலியல் தொழில்..? அதிரடி சோதனை..!

சென்னையின் பிரதான பகுதிகளில் இருக்கும் மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மசாஜ் செண்டர்களை நிறுவுவதற்கு காவல் துறை அனுமதி மற்றும் மாநகராட்சி அனுமதி பெறுவது கட்டாயம். ஆனால் சென்னை நகரிலுள்ள பல மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சென்னை மசாஜ் செண்டரில் பாலியல் தொழில்..? அதிரடி சோதனை..!

இதையடுத்து சென்னையில் தி. நகர், வடபழனி, அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் 151 மசாஜ் செண்டர்களில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சோதனை நடத்தப்பட்டது.

நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், சட்டவிதிகளின் படி மசாஜ் சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். மேலும் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை மசாஜ் செண்டரில் பாலியல் தொழில்..? அதிரடி சோதனை..!

சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் சென்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web