இன்று நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை!

 
இன்று நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை!

அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போலாகி விட்டது பலரது அரசியல் கனவு. 2021ல் கோட்டையை நாங்கள் தான் பிடிப்போம் என்று பிரச்சாரம் செய்து வந்த டிடிவி, சீமான், கமல், அன்புமணி எல்லாம் மக்களின் தீர்ப்பைக் கண்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இதையெல்லாம் முன்பே கணித்தாரோ என்னவோ… ஆவேசமாக சினிமாவில் பன்ச் டயலாக் பேசுவது போல பட்டாசாகப் பொரிந்து தள்ளிய ரஜினி, தேர்தலுக்கு முன்பாகவே அரசியலுக்கு குட்பை சொல்லி விட்டார். கொரோனா பரவுது, பிரச்சாரம் செய்ய முடியாது என்று காரணம் சொன்ன ரஜினி தான், வெகு சிரத்தையாக அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்தார். சரி.. அது அவருடைய தொழில் பக்தி. அரசியலில் மக்கள் சேவை செய்ய யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவெல்லாம் முடியாது.

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினி, கடந்த 9ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்த பிறகு புதிதாக பல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மன்ற நிர்வாகிகள் பலரும் வேறு கட்சிகளுக்கு செல்வதால் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு படம் ரிலீசாகறதுக்கு முன்னாடியும் ரஜினி, இப்படி உசுப்பேத்துறது வழக்கம் தானே என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

From around the web