செட்டாப் பாக்ஸ்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை! அரசு கேபிள் டிவி நிறுவனம்!

 
செட்டாப் பாக்ஸ்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை! அரசு கேபிள் டிவி நிறுவனம்!


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி சிவக்குமார் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் ஈரோட்டில் உள்ள கேபிள் டிவி கட்டுபாட்டு மையம் மற்றும் அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 93 ஆயிரம் செட்டாப் பாக்ஸகள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது சுமார் 23 செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்று பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ஆபரேட்டர்களும், அதிகாரிகளுமே பொறுப்பு.

செட்டாப் பாக்ஸ்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை! அரசு கேபிள் டிவி நிறுவனம்!

அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள செட்டப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால், அந்த செட்டாப் பாக்ஸ்களுக்கான விலை வசூலிக்கப்படும். மேலும், சில ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல், தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பதாக புகார் வந்துள்ளதாகவும், அவை உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

From around the web