தொடர்ந்து முதலிடத்தில் தமிழகம்

 
தொடர்ந்து முதலிடத்தில் தமிழகம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 25,368 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,52,283 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,63,390 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

From around the web