மயங்கி விழுந்து இளம்பெண் மரணம்... 4 பேரை வாழ வைத்த நெகிழ்ச்சி!

 
கிருஷ்ணவேணி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் அருகே உள்ள புரோதட்டுத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (38) என்பவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருஷ்ணவேணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கிருஷ்ணவேணியின் உறவினர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் கிருஷ்ணவேணியின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. அதில் இரண்டு சிறுநீரகங்கள் கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருவருக்கு மாற்றப்பட்டது.

கல்லீரல் மற்றும் இதயம் அரசு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டு திருப்பதியில் உள்ள சுவேமஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், பத்மாவதி இருதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நால்வரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web