அமெரிக்காவில் மீண்டும் உயரும் கொரோனா.. டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகம்

 
அமெரிக்காவில் மீண்டும் உயரும் கொரோனா.. டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகம்

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை 3.50 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதால் சமீப காலமாக அமெரிக்காவில் தொற்று பரவல் கணிசமாக குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மெல்ல மெல்ல உயர தொடங்கியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 60,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 359- பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக ஏற்படும் பாதிப்புகளில் 80% டெல்டா வகை பாதிப்பு என அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

From around the web