தீப்பிடித்த பெட்ரோல் லாரி! பெட்ரோல் பிடிக்க வந்த 13 பேர் உடல்கருகி பலி!

 
தீப்பிடித்த பெட்ரோல் லாரி! பெட்ரோல் பிடிக்க வந்த 13 பேர் உடல்கருகி பலி!

கென்யாவின் தலைநகர் நைரோபியின் வடமேற்குப் பகுதியில் கிஸூமு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் பெட்ரோலை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து விழுந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோலைப் பிடிப்பதற்காக வேகவேகமாக கேன்களுடன் லாரியின் அருகே சென்று பெட்ரோல் பிடிக்க முற்பட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த லாரியில் தீப்பற்றியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரியில் இருந்து தீ பரவியதால் மக்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. இந்த விபத்தில் 13 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உள்பட 24 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

From around the web