பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்

 
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) – மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதினர்.

இதில் முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை பெற்றார். இருப்பினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றை 6-3, 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றி ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 6-வது முறை ஆகும். இதன்படி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை, நோவக் ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

From around the web