டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம்!!
Nov 26, 2021, 20:05 IST
உலகம் முழுவதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2020 மார்ச் முதல் சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.
தற்போது வரை விமானபோக்குவரத்து சேவை ”ஏர் பபுள்” என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து டிசம்பர் 15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 3 வகையாக நாடுகள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ற கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
From around the
web