அதிர்ச்சி...சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பலியான சோகம்!

 
சுரங்கம் இடிந்து விபத்து

தென் அமெரிக்காவில், சுரிநாமின் பகுதியில் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில், சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுரங்கம் இடிந்து விழுந்த பகுதிக்கு உடனடியாக ராணுவ அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான சுரங்கம் அரசுக்கு சொந்தமானதல்ல என்றும், சட்டபூர்வமானதும் அல்ல என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து குறித்து தென்னமெரிக்க அதிபர் சான் சன்டோக்கி, "சுரங்க விபத்து பற்றி தெளிவற்ற சூழலே நிலவுகிறது. முதலில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்" என்றார்.

முன்னதாக பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த தென்னமெரிக்க அதிபரிடம், சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர், ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் 'ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது' என்று கூறிவிட்டு ஆலோசனையை பாதியில் முடித்துக் கொண்டார்.

சுரிநாமில் உள்ள தங்கச் சுரங்கங்களில் அமெரிக்கா, கனடா நாடுகள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. அங்கே சமீபகாலமாக சட்டவிரோத தங்கச் சுரங்க செயல்பாடுகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web