தொடரும் சர்ச்சை! சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்! இந்து சமய அறநிலையத்துறை திடீர் அழைப்பு!
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள், தங்கள் கோவில் நிர்வாகப் பணிகளில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்பது குறித்து பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்து சமயநிலையத்துறை, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் கோவில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதற்காக 5 பேர் கொண்ட குழுவும் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, ‘‘சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும்’’ என்று திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், தங்களது கருத்துகள் ஆலோசனைகளை வழங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அறநிலையத்துறை அமைத்துள்ள குழுவிடம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரையில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்த தங்களின் கருத்துக்களை குழு முன்பு தோன்றி பரிந்துரைக்கலாம் என்று அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 21ம் தேதி மாலை 3 மணிக்குள் ஸ்ஷீநீuபீ.லீக்ஷீநீமீ@tஸீ.வீஸீ என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தங்கள் கருத்துக்கள், ஆலோசனை வழங்கலாம் என்று அறநிலையத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!