செல்போனை பிடுங்கியதால் ஆத்திரம்.. கணவன் மீது மின்சாரம் பாய்ச்சி மனைவி வெறிச்செயல்!
உத்தரபிரதேச மாநிலம் மைன்புரியை சேர்ந்தவர் பேபி யாதவ் (33). 2007 ஆம் ஆண்டு பிரதீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். பேபி யாதவ் பொதுவாக செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.இது குறித்து பிரதீப் சிங் தனது மனைவி பேபியை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த கணவர், இதுகுறித்து பேபியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் பிரதீப் சிங் பேபியின் செல்போனை பிடுங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேபி, மே 18ம் தேதி இரவு, தனது கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து, படுக்கையில் கட்டி வைத்து மின்சாரம் பாய்ச்சினார். இதனைக் கண்ட அவர்களது 14 வயது மகன், தனது தாயை தடுக்க முற்பட்ட போது தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், பிரதீப் சிங் அளித்த புகாரில், “என் மனைவி தினமும் யாரிடமாவது மொபைல் போனில் பேசுகிறார். நான் எதிர்ப்பு தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்களின் வேண்டுகோளின் பேரில் கைபேசியை எடுத்தேன்.
இதனால் ஆத்திரமடைந்த என் மனைவி என்னையும், மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார். கடந்த வாரம் அவர் என்னை மயக்கமடையச் செய்தார், மேலும் என்னை மிகவும் துஷ்பிரயோகம் செய்தார், மேலும் கிரிக்கெட் மட்டையால் என் தலையிலும் உடலிலும் பலமுறை தாக்கி காயங்களை ஏற்படுத்தினார். என் மகன் தடுக்க வந்தபோது, அவனையும் தாக்கினான்,'' என்றார். இந்த நிலையில், காயமடைந்த பிரதீப் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், கிஷ்னி காவல் நிலைய அதிகாரி அனில் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பேபி யாதவ் மீது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி), 328 (விஷத்தால் காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் பிரதீப்பின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!