ஆணவக்கொலை.. காதலித்த மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை!

 

மகளின் கழுத்தை அறுத்து ஆணவக்கொலைச் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால் வெறித்தனமாக கொலைச் செய்துள்ள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் வசித்து வந்தவர் அம்ரிதா (20). இவர் வேறு சாதியை சேர்ந்த சுபம் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அம்ரிதாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்களை பிரிக்க அமிர்தா டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.இருப்பினும், காதலர்கள் தொலைபேசியில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். மேலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தன் மகள் காதலருடன் ஓடிவிடுவாளோ என்று அமிர்தாவின் தந்தை சந்தேகப்பட்டார்.

இந்நிலையில் நேற்று டெல்லி கஞ்சவாலாவில் உள்ள சந்த்பூர் கிராமத்தின் விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் அமிர்தா பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அமிர்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அம்ரிதாவின் கழுத்து மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்தன. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலையை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் சிங் மற்றும் தர்மேந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சந்த்பூர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அம்ரிதாவை அவரது தந்தை காரில் அழைத்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பிறகு, அவர்கள் வந்த வாகனத்தின் எண் குறித்து டிரைவரிடம் விசாரித்தபோது, ​​இளம்பெண் உட்பட இருவரை இறக்கிவிட்டதாக கூறினார். இதனால் அமிர்தாவின் தந்தை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது, ​​பேப்பர் கட்டர் மூலம் தனது மகள் அமிர்தாவை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்தாவின் தந்தையை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்த புலனாய்வுக் குழுவை சிறப்பு ஆணையர் ரவீந்திர யாதவ் பாராட்டினார். கூடிய விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார். சொந்த தந்தையால் காதல் திருமணம் செய்ய ஆசைப்பட்ட மகள் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!