அடக் கொடுமையே... ரூ.600க்காக பெற்ற மகளைக் கொன்ற தந்தை... தாய் உடந்தை! 

 

உத்தரப் பிரதேசத்தின் கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் கடந்த வியாழன் இரவு அவரது வீட்டில் இருந்து 24 வயதுடைய பூர்த்தி குப்தா என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்கள் மகளைக் கொன்றதாக பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணை அவரது தந்தை சஞ்சய் குப்தா கொன்றது தெரிய வந்தது.

சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் தந்தை தனது மகளுக்கு ரூ.600 கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். மகள் மறுத்ததால் ஆத்திரமடைந்த சஞ்சய், இரவில் தூங்கிக் கொண்டிருந்த மகளை கழுத்தை நெரித்து கொன்றார்.

இதுபற்றி  தெரிந்தும் பெண்ணின் தாய் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் குப்தா, அவரது மனைவி வந்தனா குப்தா ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!