அதிர்ச்சி... வேன் கவிழ்ந்து கோர விபத்து... பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

 
சத்தீஸ்கரில் மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து நேரிட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் கவர்தா பகுதியில் உள்ள 'பைகா' பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் பாரம்பரிய 'டெண்டு' இலைகளை சேகரித்துவிட்டு மினி சரக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். பஹ்பானி பகுதியில் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது.

வேனில் இருந்த பயணிகள் அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் குய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 'பைக்கா' பழங்குடியினர் பீடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 'டெண்டு' இலைகளை சேகரிக்கின்றனர். 'டெண்டு' இலைகள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சேகரிக்கப்படுகின்றன. இந்த இலைகள் பீடிகளை உருட்ட பயன்படுகிறது.

இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு மாநில அரசு இரங்கல் தெரிவித்துள்ளது மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இந்த விபத்து அப்பகுதி பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!