வார இறுதி விடுமுறை... தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக எஸ்.இ.டி.சி அறிவித்துள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 2 நாட்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அதன்படி இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 355 சிறப்பு பேருந்துகளும், வருகிற 20ம் தேதி 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 சிறப்பு பேருந்துகளும், வருகிற 20ம் தேதி 55 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வருகிற 21ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதே போன்று வரும் 21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது வழக்கம். இதையொட்டி வருகிற 20ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மறுநாள் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!