கோர விபத்து... 20 அடி பள்ளத்தில் பாய்ந்த மினிவேன் ... 17 பெண்கள் உட்பட 18 பேர் உடல் நசுங்கி பலி... 5 பேர் கவலைக்கிடம்!
சத்தீஷ்கர் மாநிலத்தில் கவர்த்தா பகுதியில் 'பைகா' பழங்குடி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 30 பேர் கொண்ட குழுவினர், பாரம்பரிய 'டெண்டு' இலைகளை சேகரித்துவிட்டு மினி சரக்கு வேனில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்த வாகனம் பஹ்பானி பகுதியில் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இந்த கோரவிபத்தில் 17 பெண்கள் 1 ஆண் உட்பட மொத்தம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!