பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை... தரையில் வீசி கொடூரமாக கொன்ற தந்தை!

 

பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை, ஆண் குழந்தை பிறக்கவில்லை என்கிற ஆத்திரத்தில், மருத்துவமனையில் பார்க்க சென்ற தந்தை, தரையில் வீசிய கொடூரமாக கொன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் சிர்சா கிராமத்தில் வசிப்பவர் முகமது ஃபர்ஹான். விவசாய வேலைச் செய்து வரும் முகமதுவுக்கும், ஷபோ பேகமுக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முகமதுவின் மனைவி ஷபோ மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார். 

கடந்த 5 நாட்களுக்கு முன்னர், பிரசவ வலியால் துடித்த ஷபோ, தனியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஷபோவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பிரச்னைகள் இருந்ததால், பிரசவத்திற்கு பின்னர் அருகிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்காக முகமது மருத்துவமனைக்கு வந்த போது, ​​​​அவரது அண்ணி சுனைனா குழந்தையை முகமதுவிடம் கொடுத்துள்ளார். அதுவரையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என தெரியாத முகமது, மருத்துவமனையில் பெண் குழந்தை என தெரிந்ததும், ஆத்திரத்தில் குழந்தையை மருத்துவமனையின் தரையில் வீசி விட்டு சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த குழந்தையை குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. 

இந்நிலையில், ஷபோவின் தாயார் நஸ்ரீன், தனது மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார், முகமதுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்