எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இளைஞர்கள் 3 பேர் பலி... கதறிய பெற்றோர்!

 

 ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருபவர் 23 வயது  லோகேஷ். இவர்  சசிகுமார் மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்  பாலசுப்ரமணியம்  மூவரும் இணைபிரியாத நண்பர்கள். 20களில் இருக்கும் மூன்று பேரும்  வேலைதேடி பெங்களூருக்கு வந்துள்ளனர். இவர்கள் பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே சின்னப்பனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர்.  

இரவு நேரத்தில் இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கி  எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.மூவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் கவனக்குறைவால் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேரும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை  இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேலை தேடிச் என்ற 3 பேரும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!