திமுக ஊராட்சி தலைவி வீட்டு காரில் 440 கிலோ குட்கா... இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு... டிடிவி தினகரன் ஆவேசம்!
தற்போது, குட்கா பொருட்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் தினந்தோறும் ஏதோவொரு பகுதியில் போதைப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில், தென்காசியில் திமுக ஊராட்சி தலைவியின் கணவர் காரில், 440 கிலோ குட்கா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதி முழுக்க கடைகளுக்கு குட்கா பாக்கெட்டுகளை திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் இதெல்லாம் தெரிந்தும், இத்தனை நாட்களாக போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள் பொதுமக்கள்.
இந்நிலையில், போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என்று தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்கா பறிமுதல் - வேலியே பயிரை மேய்வது போல போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வரும் தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!