undefined

நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி கவலைக்கிடம்... பெரும் சோகம்!

 

 
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வருபவர் ரகு. இவர் இதே பகுதியில் உள்ள  மாடல் பள்ளி சாலையில்  பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷாவுடன் பூங்காவில் உள்ள அறையிலேயே தங்கி வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று ரகு தனது உறவினர் ஒருவர் இறந்ததால் விழுப்புரம் சென்றுவிட்டார்.  நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி  தான் வளர்க்கும் 2  நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார்.

அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்து குதறிவிட்டன.  குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த தாய் சோனியா நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற முயற்ச்சித்தார்.   அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன. நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, நாய்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால் இந்த விபத்து ஏற்படலாம் எனத் தெரிகிறது.   நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார் புகழேந்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில்  குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை அளிப்பதாக ஒப்புக்கொண்டார்.  இதனையடுத்து சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!