அடியாத்தீ... 6 அடி நீளத்தில் முருங்கைக்காய்.... வாய் பிளக்கும் பொதுமக்கள்!
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் முருங்கைக்காய்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடிக்கு நீளத்திற்கு நீட்டமாக காய்த்து தொங்குவதை அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து வாய்பிளந்தபடி செல்கின்றனர். தேனி மாவட்டம் கம்பம், சுருளிப்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, ஓய்வுபெற்ற பிறகு தனது வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் காய்கறி சாகுபடி செய்து வருகிறார். ரசாயன மருந்து தெளிக்காமல் இயற்கை முறையில் கத்திரிக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறி செடிகள், அத்தி, முருங்கை உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணதாசனுக்கு, சுருளிப்பட்டியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் புட்டு முருங்கையின் 4 குச்சிகளை கொடுத்தார். அவற்றை கண்ணதாசன் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அதில் ஒரு குச்சி மட்டுமே மரமாக முளைத்து வளர்ந்தது. அந்த மரத்தில் முருங்கைக்காய் காய்க்க தொடங்கியது.
தொடக்கத்தில் சாதாரணமாக மரத்தில் இருப்பது போன்று காய்கள் காய்த்த நிலையில், நாளடைவில் நீளமாக காய்கள் வளர தொடங்கின. இதனை பார்த்த கண்ணதாசன் காய்களை பறிக்காமல் விட்டார். மேலும் சில நாட்களில் முருங்கைக்காய்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடிக்கு நீளத்திற்கு நீட்டமாக காய்த்து தொங்கின.
இதில் சில காய்கள் மரத்திலிருந்து சாட்டை போல் தொங்கி, தரையில் முட்டி மீண்டும் மேல்நோக்கி சுருண்டு வளர்ந்து வருகின்றன. இந்த முருங்கைக்காய்களை கண்ணதாசன் தினமும் பறித்து, தனது டீக்கடையில் காட்சிப்பொருளாக தொங்க விட்டுள்ளார். கம்பம்-சுருளிப்பட்டி சாலையில் செல்லும் பொதுமக்கள் இந்த நீளமான முருங்கைக்காய்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சிலர் அவற்றை விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!