விநாயகா் சிலை ஊா்வலத்தில் 9 போ் பலி, பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்!
கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருந்தார். அத்துடன் ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.
விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளையொட்டி, கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகா் சிலை ஊா்வலம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊா்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மோதியது.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பதிவில், " கர்நாடகம் மாநிலம் ஹசன் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் மனதை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 ரொக்கத்தொகையும் வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!