சோகம்! மகாளய உற்சவத்தில் படகு கவிழ்ந்து 24 பேர் பலி!

 

மகாளய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து பெரும் விபத்தானது. இந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக பலியானார்கள். வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் உள்ள போடா உபாசிலாவின் அவ்லியார் காட் என்ற இடத்தில் கரடோவா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்தவர்களில் 24 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காணவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர். 

70 முதல் 80 பேருடன் சென்ற படகு மதியம் 1.30 மணியளவில் உபாசிலாவின் மதேயா காட் பகுதியில் கவிழ்ந்ததாக போடா யுஎன்ஓ முகமது சோல்மன் அலி தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உடனடியாக அறிய முடியவில்லை.

உயிரிழந்தவர்களில் 8 குழந்தைகள், 4 ஆண்கள் மற்றும் 12 பெண்கள். அவர்களில், எட்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 16 உடல்கள் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ளன.

போரோசோஷி ஒன்றியத்தின் கீழ் உள்ள போடேசரி இந்து கோவிலை நோக்கி நேற்று மதியம் 1.30 மணியளவில் மரியா யூனியனின் கீழ் உள்ள அவலியா காட் அருகே படகு கவிழ்ந்தது என்று போடா உபாசிலா யுஎன்ஓ முகமது சோல்மன் அலி தெரிவித்தார். பெரும்பாலான பயணிகள் மகாளய உற்சவத்திற்காக கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!