undefined

கதறும் பெற்றோர்...  14வயது சிறுவன் வெயிலில் மயங்கி சரிந்து பலி...  கோவிலுக்கு சென்ற போது சோகம்!

 

 கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடும் போது மரணம், பள்ளியில் மயங்கி சரிந்து பலி, மணமேடையில் பலி என தொடர்கதையாகி வருகின்றன. மாறிவரும் உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை இவைகளுடன் தற்போது வெயிலும் கொளுத்தி வருகிறது. வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள், இணைநோய் இருப்பவர்கள் முதியவர்கள் யாரும் பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வரவேண்டாம் என எச்சரிக்கைவ் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியில் வசித்து வருபவர்  சத்யா

43 வயதான  இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி  வெண்ணிலா . இவர்களுடைய மகன்கள் 14 வயது  அர்ஷன், 12 வயது பரத்.  இவர்களின் குலதெய்வ கோவில் மூங்கில் வாழி அம்மன் கோவில். இந்தக் கோவில்  பக்கத்துக் கிராமமான நத்தம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ளது.  
இந்நிலையில் நேர்த்திக்கடன் செலுத்த சத்யா தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு  குடும்பத்துடன் நடந்தே சென்றுள்ளனர். அப்போது அதீத வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் மயங்கி விழுந்து உள்ளார். 
இதையடுத்து பதறிய சத்யா குடும்பத்தினர் அர்ஷனை எழுப்ப முயற்சித்தனர்.  எவ்வளவு முயன்றும் அர்ஷனை எழுப்ப முடியவில்லை. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
 
தகவல் அறிந்து வந்த ரத்தினகிரி போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!