undefined

 டிரான்ஸ்பார்மரில் விழுந்த பந்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி! 

 
 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர்   7 வயது சிறுவன் பஹத். இவர்  தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கிரிக்கெட் பந்து அங்கிருந்த ஒரு டிரான்ஸ்பார்மர் அருகே விழுந்துவிட்டது. அந்தப் பந்தை எடுப்பதற்காக சென்ற சிறுவன் பஹத் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பஹத் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  றுவன் மீது மின்சாரம் பாய்ந்ததும் மின்சாரத்தை துண்டிக்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் மின்சாரத்தை துண்டிக்க தாமதம் ஏற்பட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில், அங்கிருந்தவர்களே போராடி சிறுவனை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது. இந்த சம்பவம் நடந்த அதே இடத்தில் ஏற்கனவே சுமார் 14 விலங்குகள் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் மின்சார வாரிய ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?