29 வயசு தான்... இளம்நடிகை திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்!

 

இன்று நடிகை வைபவி, ஹிமாச்சல் பிரதேசத்துக்கு காதலருடன் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், பிரபல பெங்காலி நடிகை சுசிந்திரா தாஸ்குப்தாவும் தனது 29வது வயதில் மரணமடைந்துள்ளார்.

பெங்கால் சீரியல்களில் நடித்து வந்த நடிகை சுசிந்திரா, அதன் பின்னர், பெங்காலி மொழி படங்களிலும் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்து தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

பெங்காலி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒருசில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சுசிந்திரா தாஸ்குப்தா (29). இவர் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் சுசிந்திரா தாஸ்குப்தா பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி சுசிந்திரா தாஸ்குப்தா பலியானார். கொல்கத்தாவில் பராநகர் கோஷ்பாரா பகுதியில் சுசிந்திரா தாஸ்குப்தா வந்தபோது அவர் சென்ற வாகனம் மீது இன்னொரு இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுசிந்திரா தாஸ்குப்தா மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுசிந்திரா தாஸ்குப்தா உயிர் பிரிந்தது. இளம் நடிகை சாலை விபத்தில் மரணம் அடைந்தது மேற்கு வங்க திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவருடைய கணவர் தேப் ஜோதி சென்குப்தா கூறுகையில், நேற்று ஷுட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது இந்தச் சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!