சுயநலமில்லாத அயராத உழைப்பாளி... நடிகை கெளதமியின் முடிவு வருத்தமளிக்கிறது... நடிகை குஷ்பு!
பிரபல நடிகையான கௌதமி பாஜகவில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அண்மையில் அன்பழகன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் மோசடி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் விலகல் குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எனது சக உறுப்பினரான கெளதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்; அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!