காதல் கணவனைக் கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய  ஆசிரியை! திருச்சியில் பரபரப்பு!

 

திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை கைவிட்டு, ஆசிரியை ஒருவர் கள்ளக்காதலனுடன் தப்பியோடி விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு செங்காட்டுப்பட்டி பகுதியில் வசிக்கும்  நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நதியா நர்சிங் பயிற்சி முடித்துள்ளார்  தற்போது  கோம்பைபுதூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் நதியா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராம்  மூலமாக விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருடன் நதியாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது இன்ஸ்டாகிராம் நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக திடீரென நதியாவை காணவில்லை. இதனால் நதியாவை அவரது காதல் கணவர் உள்பட உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கணவர் புஷ்பராஜ் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறும் செய்தி ஒன்று வந்துள்ளது. தான் பிராகாஷூடன் சென்னை செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் தகவல் இருந்தது.


 
கணவர் அதனை துறையூர் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓடிய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை நதியாவை, அவரது தொலைபேசி  எண்ணைக் வைத்து தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!