உஷார்... காருக்குள் மது அருந்திய அண்ணன் - தம்பி மூச்சுத் திணறி உயிரிழப்பு!
காருக்குள் அமர்ந்து மது அருந்திய சகோதர்கள், மது போதையில் ஏஸியை ஆன் செய்து விட்டு அப்படியே காருக்குள்ளேயே தூங்கிய நிலையில், மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியை சேர்ந்தவர் திலீப்(25) . இவருடைய சகோதரர் வினய்(20). திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வினய் பணிபுரிந்து வருகிறார்.
காரின் உள்ளே காற்றோட்டம் இல்லாத நிலையில் சகோதரர்கள் இருவரும் வெளியே வர முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்தனர். காரின் மேலே பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டிருந்ததால் உள்ளே இவர்கள் இருவரும் இருந்தது வெளியே யாருக்கும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து திலீப்பின் தந்தை மறுநாள் காலை காரின் மீது இருந்த கவரை அகற்றிய போது மகன்கள் இருவரும் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இது குறித்த காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சகோதரர்கள் 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மது போதையில் காரின் உள்ளே இருந்து கொண்டு ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குடிமகன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கூறினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!