எல்லா விரதங்களும் முடிஞ்சுடுச்சு... மீன்கள் விலை உயர்வால் மீனவர்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். நேற்றும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க நாட்டுப் படகு மீனவர்கள் சென்றனர். ஆனால் கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்பாடு இல்லை.
குறைந்த அளவு மீன்களுடன் நாட்டுப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மீன்களை வாங்குவதற்காக காலை முதலே ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர்.
அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர். இதனால் வரத்து குறைவாக இருந்த போதிலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் கடந்த வாரம் கிலோ ரூ.350-க்கு விற்பனையான ஊளி, பாறை, விளை மீன்கள் நேற்று கிலோ ரூ.400 வரை விற்பனையானது.
மேலும் சீலா மீன் கிலோ ரூ.1300 வரையும், சூப்பர் நண்டு கிலோ 700 வரையும், பொட்டு நண்டு கிலோ ரூ.350 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1500 வரையும், கேரை மீன் கிலோ ரூ.250 வரையும் விற்பனையாகின. ஆனால் விலை உயர்ந்த போதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாங்கி சென்றதால் சிலமணி நேரங்களில் மீன்கள் விற்று தீர்ந்தன. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க