மதுரையில் ஆக. 21ல் தவெக மாநாடு... காவல் துறைக்கு கடிதம்!
மதுரையில் ஆகஸ்ட் 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடத்துவதற்கு காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25ம் தேதி நடைபெறும் முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.
மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 29ம் தேதி கட்சியின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த் மதுரைக்கு வந்தார். அப்போது, அவா் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்தை சந்தித்து பேசினார்.
அப்போது மாநாடு நடைபெறும் 25ம் தேதியை தொடர்ந்து 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தி வருகிற 27ம் தேதி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருக்கும் எனக் கூறி காவல் துறை சாா்பில் த.வெ.க. மாநாடு தேதியை மாற்றுவதற்கு யோசனை தெரிவித்தனர்.
இதன்படி வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒரு தேதியை நீங்கள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். காவல் துறை கூறிய தேதிகளில் ஒன்றான ஆக. 21ம் தேதியை தேர்வு செய்து மாநாடு நடந்த காவல் துறையினரிடம் தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,, மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பை விஜய் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!