அசத்தல் !! ரூ. 204 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்ற பிறகு ரூ1500 கோடியாக உயர்வு !! 

 


நேற்று, ஹெச்பிஎல் எலக்ட்ரிக் & பவர் லிமிடெட் பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூபாய் 89.85-ல் இருந்து 10.24 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்குக்கு ரூபாய் 99.05 ஆக உயர்ந்துள்ளது. வர்த்தகத்தின் இறுதியில்  இந்நிறுவனத்தின் பங்குகள் 4.07 சதவிகிதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை ரூபாய் 93.51 ஆக இருந்தது. நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 6.76 மடங்குக்கு மேல் அதிகரித்தன.


HPL Electric & Power நிறுவனமானது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபாய் 204 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் மீட்டர் ஆர்டர்களை (நிகர வரி ரூபாய் 179.45 கோடி) பெற்றுள்ளதாக எக்ஸ்சேஞ்ச்களுக்கு (BSE & NSE) தெரிவித்தது. நிலுவையில் உள்ள ஆர்டர்களின் வலுவான பைப்லைனுடன், நிறுவனம் துரிதமான வேகத்தில் இயங்கி சப்ளை செய்து வருகிறது. நிறுவனம் தற்போது ஆர்டர் புத்தகம் ரூபாய் 1500 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது.HPL Electric & Power Limited கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி மின் சாதன உற்பத்தி நிறுவனமாகும். நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 6.76 மடங்குக்கு மேல் அதிகரித்தன.

எச்பிஎல் எலக்ட்ரிக் & பவர் சந்தை மதிப்பு ரூபாய் 551 கோடியாக இருந்தது. நிறுவனம் காலாண்டு முடிவுகள் மற்றும் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகள் இரண்டிலும் நேர்மறையான எண்களைப் பதிவு செய்துள்ளது. நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறது மற்றும் ஸ்மார்ட் மீட்டரிங் திட்டத்திற்கான அரசாங்க திட்டத்தில் முன்னணியில் ஆர்டர்களை செயல்படுத்துகிறது.
இப்பங்கு 2 ஆண்டுகளில் 115 சதவிகித மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது. முதலீட்டாளர்கள் இந்த ஸ்மால் கேப் நுகர்வோர் பங்குகளை கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!