undefined

 பக்தர்கள் அதிர்ச்சி... ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாட்களில் ஆற்றில் நீராடத் தடை!
 

 
 

நாளை மறுநாள் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கு. பொதுவாக ஆடி மாதம் முழுவதுமே கோவில்திருவிழாக்கள் களைகட்டும். இந்த மாதத்தில்  கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறநிலையத்துறை ஆணையர்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் காவேரி ஆற்றின் அருகில் அமைந்திருக்கும் திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையின் காரணமாக பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி  ஈரோடு மாவட்டம் பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில், காங்கேயம்பாளையம் அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோவில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில், ஊஞ்சலூர் அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!