பெங்களூருவில் பரபரப்பு... துணை நடிகை மூலம் ’பப்’ நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் விற்ற ஏஜென்ட் கைது!
சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த துணை நடிகை எஸ்தர். இவர் சென்னை மாநகர் முழுவதும் பப்புகள் மற்றும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்து வந்ததாக 2024 நவம்பர் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், துணை நடிகை எஸ்தர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்னத்திரை நடிகைகளுக்கு வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். அத்துடன் அவரது ஆண் நண்பர் சூளை காளத்தியப்பா தெருவில் வசித்து வரும் பட்டேஜா பவன் (எ) ஜேம்ஸ் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 19 கிராம் மெத்தாம்பெட்டமைன், 99 கிராம் மலனா கஞ்சா பேஸ்ட் மற்றும் கிரீம், 95 மில்லி கஞ்சா ஆயில், 21 கிராம் ஓஜி கஞ்சா மற்றும் 12 எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். துணை நடிகை மூலம் சென்னையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளி ஏஜென்ட் சரவணராஜ் தலைமறைவாகிவிட்டார்.
போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு தீவிர தேடலுக்கு பிறகு அவரை கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமசாமி பாலையா பகுதியில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சரவணராஜை கைது செய்துள்ளனர். இவர் போதை பொருள் மொத்தமாக வாங்கி துணை நடிகை மூலம் சென்னை முழுவதும் புழக்கத்தில் விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!