நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து... 4 பேர் பலியான சோகம்!
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி, ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கின்றனர். இந்த ஆபத்தான பயணங்களில், பலருக்கு உயிரிழப்பு மற்றும் விபத்து சம்பவங்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
சமீபத்தில், வங்காளதேசம், எகிப்து மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்த 90 அகதிகள், லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்லும் முயற்சியில் இரண்டு படகுகளில் பயணம் மேற்கொண்டனர். இதில் ஒன்று அல் கான்ஸ் நகருக்கு அருகே கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளனாது.
விபத்துக்குப் பின், லிபியா கடற்படைக்கு தகவல் வழங்கப்பட்டு, மீட்புப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. கடலில் தத்தளித்த அகதிகளை சிலரை உயிருடன் மீட்டும் முயற்சி நடைபெற்றது. ஆனால், இந்த விபத்தில் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்லும் அகதிகள் மேற்கொள்ளும் பயணம் மிகவும் ஆபத்தானதாகும். பெரும்பாலானவர்கள் பாதுகாப்பற்ற படகுகளில், கடும் புயல் மற்றும் திறமையற்ற இயக்குநர்களின் கீழ் பயணம் செய்வதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. லிபியாவில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட வீரர்கள், மீட்புச் செயல்களை மேற்கொண்டும், கடலில் தத்தளிக்கும் பயணிகளை காப்பாற்ற முனைந்தனர்.
இந்த சம்பவம், சட்டவிரோத அகதிகளுக்கான கடல் பயணத்தின் ஆபத்துகளை மீண்டும் உருவாக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல விரும்பும் அகதிகள், பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் சர்வதேச உதவிகளை முன்னேற்றும் அவசியம் உள்ளதாக கூறுகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க