ரூ.50 நோட்டுகளுக்கு பதிலாக நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் விளக்கம்!
இந்தியாவில் வங்கிகள் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ரோஹித் தண்ட்ரியால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவிலி ரூ.50 பணத்தாள்களில் தொட்டுணரக்கூடிய குறிப்பான்கள் இல்லை. மற்ற பணத்தாள்களைப் போன்று, ரூ.50 தாள்களை அடையாளம் காணுவது மிகவும் கடினமாக இருப்பதாக ரோஹித் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் 2022 ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கணக்கெடுப்புகளை விவரித்து நாணயங்களின் எடை, அளவு, தனித்துவம் இல்லாத காரணத்தால், அவற்றை பெரும்பாலான பயனர்கள் தவிர்க்கின்றனர். இவையெல்லாம்தான் பணத்தாள்களை அன்றாட பயன்பாட்டுக்கு மிகவும் நடைமுறைப்படுத்தும் காரணிகள் என மத்திய அமைச்சகம் குறிப்பிட்டதாகக் கூறினர்.
தொடர்ந்து, ரூ.10, ரூ.20 போன்ற நாணயங்களைவிட தாள்களுக்குத்தான் பரவலான மக்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். தற்போது ரூ.50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை என மத்திய அமைச்சகம் நீதிமன்றத்தில் கூறிவிட்டது. இதனையடுத்து, ரிசர்வ் வங்கியின் பிரமாணப் பத்திரத்தை மறுஆய்வு செய்து, பதிலளிக்க வழக்குரைஞர் ரோஹித்துக்கு கால அவகாசம் அளித்துள்ளது. அத்துடன், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 17 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!