நெல்லையில் பரபரப்பு... நீதிமன்ற வாசலில் வெட்டிக் கொலை... 4 பேர் கும்பல் வெறிச்செயல்!
நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கு ஒன்றின் விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவர் காத்திருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை துரத்தி சென்றது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு ஓடிச் சென்ற போது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவரை 4 பேர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!