ஜூன் 24ல் விசிக பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாரயத்தால் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக விசிக தலைவர் திருமாவளவனும் நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் கள்ளக்குறிச்சி நச்சு சாராய சாவுகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உட்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஜூன் 24ம் தேதி மாலை 3 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். எனக் கூறியுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!