உல்லாசத்திற்கு இடையூறு... கள்ளக்காதலனை ஏவி கணவனைக் கொன்ற மனைவி!
உத்தரபிரதேசம் மீரட் அருகே கணவர் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு செய்கிறார் என எண்ணிய மனைவி, கள்ளக்காதலனை ஏவி கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அங்கு அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்த ராகுல், அஞ்சலி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அஞ்சலி, அதே கிராமத்தில் வசிக்கும் அஜய்யுடன் நெருக்கமாக பழகி வந்தது ராகுலுக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதை ராகுல் கண்டித்த போதிலும், அஞ்சலி அஜய்யுடன் தொடர்பை தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவர் தடையாக இருப்பதாக அஞ்சலி அஜய்யிடம் கூறியதால், இருவரும் சேர்ந்து ராகுலை அழிக்க திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தன்று அஜய், ராகுலை பேச வேண்டுமென கூறி வயல் பகுதியில் அழைத்தார். அங்கு அவரை துப்பாக்கியால் தாக்கியதாக கூறப்படுகிறது. ராகுல் அங்கு உயிரிழந்தார்.
அஞ்சலி முதலில் யாரோ கொலை செய்துவிட்டனர் என போலிஸ் புகார் அளித்தார். ஆனால் அவர் மர்மமாக காணாமல் போனதும், கிராமத்தினரின் தகவல்களும் போலீசாருக்கு சந்தேகமாக இருந்தது. தொடர்ந்து நடத்திய தேடுதலில் அஜய் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஞ்சலிக்கும் போலீஸ் தடயவியல் பிரிவு தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீப மாதங்களில் உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதல் காரணமாக கணவர்களை கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீரட் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க