பொறியியல் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை...!!

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்  சுப்பிரமணிய சிவா காலனியில் வசித்து வருபவர்   லிங்கேஷ். இவரது மகன் சூரியபிரகாஷ். பொறியியல் பட்டதாரியான இவர்  பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து   வந்தார்.இந்நிலையில், ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கி, ஆன் லைன் கேம்லிங், கிரிக்கெட் சூதாட்டங்களை சூர்யபிரகாஷ் விளையாடி வந்தார்.  கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில், ஆன்லைன் கடன் செயலி கும்பல், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  பாப்பாரப்பட்டிகு   வந்த சூர்யபிரகாஷ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.   இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்  அக்டோபர்  12ம் தேதி விஷம் குடித்து விட்டு தனது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த   தந்தை அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்தார் .  

அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்ய பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவல் அறிந்து மருத்துவமனைக்கு   சென்ற  காவல்துறையினர் சூர்யபிரகாசின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து   வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!