தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 5 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து பலியான சோகம்!

 

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் சோன்பெத் பகுதியில் ஒரு பண்ணை அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் 6 பேர் ஈடுபட்டனர். அப்போது, கழிவுநீர் தொட்டியில் ஆறு தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரம் போராடி அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டனர். பின்னர் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 6 பேரில் 5 தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மற்றொரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து சோன்பெத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு விஓவாயு தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!