5 பேர் பலி... கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்... கனிமொழி அட்வைஸ்!
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப்படை சாகசத்தை நேரில் கண்டு ரசிக்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. ஏற்பாடுகள் செய்ததில் குளறுபடி, சுட்டெரிக்கும் வெயில், ஒரே நேரத்தில் மக்கள் வெளியேறிய போது போதிய பாதுகாப்பு வசதியின்மை, குடிநீர் வசதியின்மை, வீடு திரும்பவும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!