undefined

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... அரசு பள்ளி ஆசிரியர் கைது!

 
 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக அரசு பள்ளி ஆசிரியரைப் போலீசார்  கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன் (50). கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பள்ளியில் 7, 8ம் வகுப்புகளில் பயின்று வரும் 3 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வட்டார கல்வி அலுவலர் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?