IRCTC இணையதளம் முடங்கியது... முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் தவிப்பு!

 
 

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் இன்று காலை திடீரென முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்த நிலையில், பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். எனினும் IRCTC இணையதள செயலிழப்புக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. 

2022-24 க்கு இடையில் இந்தியாவின் EV துறை தனது நிதியில் பாதியை இழந்தது ஏன் என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார். "@RailMinIndia @AshwiniVaishnaw @PMOIndia இந்த மோசடி எப்போது நிறுத்தப்படும்? எப்போதும் காலை 10 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த நிலையில், தற்போது மீண்டும் இயங்க தொடங்கியதும் இரட்டை விலை கொண்ட பிரீமியம் டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கிறது. இது @IRCTCofficial @raghav_chadha மூலம் தெளிவான மோசடி என்று புகார் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். 

"இந்தியா சந்திரனை அடைந்தது. ஆனால் இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு செயலி தட்கல் முன்பதிவை செயலிழக்காமல் கையாள முடியாது” என்று கமெண்ட் செய்துள்ளனர். 

இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய IRCTC இணையதள செயலிழப்பு இது. முன்னதாக கடந்த டிசம்பர் 9ம் தேதி இ-டிக்கெட்டிங் பிளாட்பார்ம் ஒரு மணி நேர பராமரிப்புக்கு செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!